சென்னை: உணவு கலப்பபடங்களை தடுக்கும் வகையில்,  ஓட்டல்கள், மளிகை கடைகளில், கலப்படத் தடுப்புத்துறை அதிகாரிகளின் செல்போன்களை ஒட்டும்படி சென்னை உயர்நீதிமன்றத் உத்தரவிட்டு உள்ளது.

உணவு கலப்படம் தொடர்பான புகாரை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  கலப்படம் தொடர்பாக ஓட்டல்கள், மளிகை கடைகளில், மக்கள் எளிதாக தங்களது புகார்களை பதிவுசெய்யும் வகையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் செல்போன் எண்களை கடைகளில் வாடிக்கையாளர்கள் காணும் வகையில் ஒட்ட வேண்டும் என  உத்தரவிட்டுள்ளது.

மேலும், உணவு கலப்பட புகார் மீது நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் துறைத்தலைவருக்கு உத்தரவிட்டதுடன்,  இதுகுறித்து உணவு பாதுகாப்பு ஆணையர் உனடடியாக நடவடிக்கை எடுக்கவும்  உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.