மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சுரேஷ் கோபி.
தற்போது புதுமுக இயக்குனர் மாத்யூஸ் இயக்கும் படத்தில் சுரேஷ் கோபி நடித்து வருகிறார். இது அவருக்கு 250-வது படம் ஆகும். சில தினங்களுக்கு முன்பு படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டனர்.
தனது திரைக்கதையில் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் பிரிதிவிராஜ் நடித்து வரும் கடுவா படத்தின் டிரெய்லரைப்போல் இருப்பதாக மலையாள இயக்குனர் ஜினு அப்ரகாம் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து சுரேஷ் கோபி படத்துக்கு கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.