சென்னை:
சென்னை கவுன்சிலர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் காலமானார்.

சென்னை மாநகராட்சியின் 165-வது வார்டு கவுன்சிலரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் உடல் நலக்குறைவால் காலமானார்.

உடல்நலக்குறைவால் போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.