சென்னை:
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசிரியர்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசிரியர்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், தினமும் காலை மாணவர்கள் பிரேயர் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்க வேண்டும். இது அவர்களை சரளமாகப் பேசுவதற்கும் மேடை பயத்தைப் போக்குவதற்கும் உதவியாக இருக்கும்.
அவர்கள் தமிழர் வரலாறு, கலாச்சாரம் போன்றவற்றைப் பேசுவார்கள், அது அவர்களுக்கும் ஆங்கில அறிவை அதிகரித்துக் கொள்ள உதவும். அவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என்றார்.