சென்னை: சென்னையில் காணாமல் போன 277 கொரோனா நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியை சென்னை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்

சென்னையில் மே 23 முதல் ஜூன் 11 ம் தேதி வரை கொரோனா உறுதியான 277 பேர் மாயமானதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாநகராட்சி அளித்த பட்டியல் உதவியுடன் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தவறான முகவரி, செல்போன் எண் கொடுத்த 277 பேரையும் கண்டறியும் முயற்சியில் தற்போது போலீசார் களமிறங்கியுள்ளனர். அதன் ஒருபகுதியாக, தற்போது 90 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புளியந்தோப்பு மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதிகளை சேர்ந்த நபர்களை தான் அதிகம் காணவில்லை. நகரத்தில் உள்ள ஆய்வகங்களில் நெகட்டிவ் சோதனை முடிவு பெற்றவர்களின் விவரங்கள் பொது சுகாதார இயக்குநரகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அதுவும் சென்னை பெருநகர மாநகராட்சிக்கு அனுப்பப்படுகிறது.

ஆனால் கள ஊழியர்களால் நோயாளிகளால் வழங்கப்பட்ட முகவரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நோயாளியின் முகவரி எந்த காவல்நிலைய அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று பார்க்கப்பட்டது. அவர்கள் நோயாளி வழங்கிய தொலைபேசி எண்களை அழைத்து முகவரிகளை சரிபார்த்தனர்  என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.

எங்கள் அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சரிபார்த்து, வழங்கப்பட்ட தொலைபேசி எண்களையும் அழைத்தனர். முகவரி அல்லது தொலைபேசி எண் சரியாக இருந்ததால் 277 பேரில் 90 பேரை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது என்றார் அவர்.

பொதுமக்கள் நோயாளியைப் புறக்கணிக்கத் தொடங்கி அவரிடமிருந்து விலகி இருக்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிலர் கொரோனா தொற்று உள்ள நபர்களின் வீடுகளுக்கு வெளியே வேப்ப இலைகளை கட்டுகிறார்கள் என்றார்.