சென்னை:

மிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 6 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் 4 பேரும், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் தலா ஒருவர் என மொத்தம் 6 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்து. தமிழகத்தில் ஒருவர் மட்டும்தான் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசிய போது கொரோனா வைரஸ் பாதிப்புள்ள 43 ஆயிரத்து 538 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 8 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களில் 4 பேர் ஒரே குடும்ப உறுப்பினர்கள். அந்த 4 பேரில் 10 மாத குழந்தை ஒன்றுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆக உயர்ந்து உள்ளது. ஈரோட்டை சேர்ந்த இவர்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டில் இருந்து திரும்பிய 2 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. 89 பேர் பரிசோதனை முடிவுகளுக்காக தொடர்ந்து காத்திருக்கின்றனர். 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். காலை வரை 42 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், 8 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.