சென்னை:

மிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்கள், கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றனர்.

இதனால், தமிழக்ததில் மீண்டும் மத ரீதியிலான விமர்சனங்களும்,.கருத்து மோதல்களும் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, அனைத்து மதத்தலைவர்களுடன் இன்றுமாலை தமிழக அரசு ஆலோசனை செய்வதாக அறிவித்து உள்ளது.

பிற்பகல் 3 மணிக்கு சென்னை கோட்டையில் உள்ள கூட்ட அரங்கில், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதாகவும், அப்போது, கொரோனா பரவல் குறித்து மதரீதியாக கருத்துகள் வெளியாவதைத் தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தப்படும் என்று என எதிர்பார்க்கப்படுகிறது.