சென்னை: பள்ளிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து உள்ளது.

மீண்டும் பரவி வரும் புதிய வகை கொரோனா காரணமாக, மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், முக்கவசம் அணிவது, சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக இருக்கும்படி, மத்தியஅரசு வலியுறுத்தி உள்ள நிலையில், தமிழகஅரசு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்க எந்தவித கட்டுப்பாடும் விதிக்காமல் அனுமதி வழங்கி உள்ளது. அதேவளையில் 2வது நாள் தொடங்கும் பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்  என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்க, பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு மருத்துவ நல்வாழ்வுத்துறையும்,  தமிழக அரசும் கொடுக்கும் அறிவுறுத்தலின்படி, பள்ளிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.