விழுப்புரம்:

விழுப்புரத்தில் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,  அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அங்குள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் குடும்பத்தினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் திடீரென மாயமாகியுள்ளார். இது மருத்துவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினல் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

மாயமான கொரோனா பாதித்த நபரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.