Skip to content
  • Mon. Jul 20th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

சென்னையில் தீவிரமடைந்து வரும் கொரோனா: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 70ஆக உயர்வு…

Oct 10, 2020

சென்னை:  சென்னையில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் அளித்துள்ள ஊரடங்கு தளர்வாலும், மக்களின் மெத்தனத்தாலும், கொரோனா  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் 70 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஒரு தெருவில் 10-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயாளிகள் இருந்தால் அந்த தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் மட்டும் 70 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் குறைந்து வந்த தொற்று பாதிப்பு, கடந்த 10 நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.  பொதுமக்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்காததுமே தொற்று அதிகரிப்புக்கு காரணம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னையில், கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,79,424 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,62,605 பேர் குணமடைந்து உள்ள நிலையில், 3,373 பேர் உயிரிழந்துள்ளனர்.. தற்போதைய நிலையில், 13,446 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் கடந்த 6-ந்தேதி  நிலவரப்படி 42 தெருக்களுக்கு மட்டுமே ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம்,  சீல் வைக்கப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது. தற்போது  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 70-ஆக அதிகரித்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி மண்டலத்தில் 4 தெருக்களுக்கும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 11 தெருக்களுக்கும், ராயபுரம் மண்டலத்தில் 2 தெருக்களுக்கும், திரு.வி.க நகர் மண்டலத்தில் 2 தெருக்களுக்கும் ‘சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 29 தெருக்களுக்கும், அண்ணாநகர் மண்டலத்தில் 3 தெருக்கள், தேனாம்பேட்டை மண்டலத்தில் 4 தெருக்கள், கோடம்பாக் கம் மண்டலத்தில் 3 தெருக்கள், ஆலந்தூர் மண்டலத்தில் 5 தெருக்கள், அடையாறு மண்டலத்தில் 4 தெருக்கள், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2 தெருக்கள், வளசரவாக்கத்தில் ஒரு தெரு என மொத்தம் 70 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post navigation

அமேசான் நிறுவனத்தில் இதுவரை 20ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு….
10/10/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

இந்தியா உலகம்

ரஷ்யாவுக்கு எதிராக கடும் தடைகள்: அமெரிக்க செனட்டில் புதிய மசோதா – இந்தியாவுக்கும் பாதிப்பு வருமா?

July 15, 2026 Sundar
உலகம்

“திறந்திடு சீசேம்” என ஹோர்முஸைத் திறந்த டிரம்ப்… கப்பல்கள் வெளியேற 20% கப்பம் வசூல்…

July 14, 2026 Sundar
உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது; ஈரான் கூற்றை மறுத்த டிரம்ப்

July 13, 2026 Sundar
உலகம்

பாங்காக் பப் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு, 22 பேர் கவலைக்கிடம்

July 13, 2026 Sundar
உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer