சென்னை:

விமான நிலையத்தில் பரிசோதனை செய்த சென்னை மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ப்டடு உள்ளது. தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 571 பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் பலியாகினர்.

இந்த நிலையில்  மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள பப்ளிக் ஹெல்த் சென்டரில் பணிபுரிந்து வந்த அரசு மருத்துவருக்கு  கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர் சிலநாட்கள் சென்னை விமான நிலையித்தில், விமானப் பயணிகளுக்கு மருத்துவ சோதனை செய்து வந்திருந்தார்.

தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைச்கு சேர்க்கப்பட்டுஉள்ளார். இது மருத்துவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.