சென்னை:
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  2,328 ஆக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக திருவிக நகரில் 412; ராயபுரத்தில் 375 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நேற்று ஒரேநாளில் 771 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதில் அதிகபட்சமாக சென்னையில் 324 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் சென்னையில் பாதிப்பு 2,328 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் – 2328, குணமடைந்தவர்கள் – 348 உயிரிழந்தவர்கள் – 22, சிகிச்சை பெற்று வருவோர் – 1952, பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர் – 6 பேர்.
திரு.வி.க. நகர் மண்டலத்தில் 412 பேரும், ராயபுரம் மண்டலத்தில் 375 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 387 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 285 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 191 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 168 பேரும், வளசரவாக்கம் மண்டலத்தில் 176 பேரும், அம்பத்தூர் மண்டலத்தில் 105 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 9 வயதுக்குள் 25 பெண் குழந்தைகளும், 28 ஆண் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்டலவாரியாக பாதிப்பு எண்ணிக்கை
திருவொற்றியூர் -40
மணலி – 13
மாதவரம் – 30
தண்டையார்பேட்டை – 168
ராயபுரம் -375
திரு.வி.க. நகர் – 412
அம்பத்தூர் – 105
அண்ணா நகர் -191
தேனாம்பேட்டை -285
கோடம்பாக்கம் -387
வளசரவாக்கம் -176
ஆலந்தூர் -14
அடையாறு – 91
பெருங்குடி -20
சோழிங்கநல்லூர் -15
பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர் -6