சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று திடீரென பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவர் பேசும் வாய்ஸ்கால், மொபைல் போனில் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தரப்பினரும் பல்வேறு வகையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில்,  தமிழக முதல்வர் தொலைபேசி வாயிலாக மக்களிடையே விழிப்புவை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி,அவரது விழிப்புணர்வு வாய்ஸ், பதிவுசெய்யப்பட்ட தானியங்கு அழைப்புகள் மூலமாக நமது எண்களை தொடர்பு கொண்டு தெரிவித்து வருகிறது.

அந்த தானியங்கி வாய்ஸ் தகவலில், வணக்கம்.. நான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறேன்.. என்று துவங்கி கரோனா பாதிப்புகளை கூறி, வீட்டிலேயே இருங்கள்.. பாதுகாப்பாக இருங்கள்.. என்று அந்த அழைப்பு முடிகிறது.