சிட்னி: இந்தியா – ஆஸ்திரேலியா இடையே முதல் டெஸ்ட் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள அடிலெய்டு மைதானத்தில், அம்மாகாணத்தில் கொரோனா பரவல் காரணமாக, போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களுக்கு அடுத்து, டிசம்பர் 17ம் தேதி டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது. இதில், முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது தெற்கு ஆஸ்திரேலியாவில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. திங்களன்று மட்டும், புதிதாக 21 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது.

இதனால், இதர மாநிலங்கள், தெற்கு ஆஸ்திரேலியாவுடனான தங்களின் எல்லைகளை, கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மூடத் துவங்கியுள்ளன. எனவே, அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய அணி, தற்போது சிட்னியில் தனிமைப்படுத்தலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், அடிலெய்டில் முதல் டெஸ்ட்டை நடத்துவதில், உறுதியாக இருப்பதாக தெரிவத்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.