சென்னை

ழல் குற்றச்சாட்டுக்காகத் தண்டனை பெற்ற ஜெயலலிதா நினைவிடத்தை மற்றொரு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்க உள்ளதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.  இதில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.

இன்று போயஸ் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவில்லத்தை பன்னீர் செல்வம் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி திறக்க உள்ளார்.

நேற்று திமுக தேர்தல் பணிக்குழுத் துணைச்செயலாளர் சிவப்பிரகாசத்தின் இல்லத் திருமண விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர தங்கு விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்த மு.க.ஸ்டாலின், சிறப்புரை ஆற்றி உள்ளார்.

அவர் தனது உரையில் ’’ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து 42 மாதங்கள் ஆகிவிட்டது. விசாரணையை கேட்டவரே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான். ஆனால் அவருக்கு ஆணையம் 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.

ஜெயலலிதா மரணத்திற்கு விடை தெரியாத சூழலில், இந்த நினைவிடம் திறப்பு அவசியமா? ஜெயலலிதா நினைவிடம் இன்று திறக்கப்படுள்ளது. தண்டனை பெற்றவருக்கு நினைவிடம்,  திறந்து வைப்பவர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.