சென்னை:
டப்பாடி பழனிசாமி குறித்து தான் பேசியதுபோன்று வெளியான ஆடியோ, தான் பேசியது இல்லை என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பனுடன் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், முன்னாள் அமைச்சர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதாக திமுகவை திட்டுவதில்லை என்று பொன்னையன் கூறுவதுபோல உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு 9 எம்.எல்.ஏ. க்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாகவும், தனது பதவியைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவதாகவும் கூறியிருப்பது போன்று இருந்தது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி குறித்து தான் பேசியதுபோன்று வெளியான ஆடியோ, தான் பேசியது இல்லை என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.