டில்லி

த்திய அரசு 5 மாநிலங்களுக்குத் தேர்தல் வருவதால்  சமையல் எரிவாயு மானியத்தை உயர்த்தியதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

சமீபத்தில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசின் ‘உஜ்வாலா’ திட்டப் பயனாளிகளுக்குச் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.100 மானியம் வழங்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால்  இந்த பயனாளிகளுக்கான மானியத்தொகை ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்படுகிறது.

நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் அகோய் குமார் தனது செய்தியாளர்கள் சந்திப்பில்  மத்திய அரசின் இந்த முடிவு குறித்து.

”விரைவில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  மத்திய அரசு இந்த தேர்தலைக் கருத்தில் கொண்டே சமையல் எரிவாயு மானிய உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல்கள் முடிந்ததும் பாஜக மீண்டும் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தும். அதன் பிறகு மீண்டும் மக்களவை தேர்தலை முன்னிட்டு விலையைக் குறைப்பார்கள் ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போது இப்படி விலை குறைப்பது பிரதமர் மோடியின் பழக்கம்”

என்று கூறியுள்ளார்.