திருப்பதி

ரும் 15 ஆம் தேதி முதல் திருப்பதி கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. ஏற்கனவே கடந்த செப்டம்பர் 18-ம்தேதி முதல் 26-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

வரும்15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 9 நாட்களுக்கு நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இந்த  நவராத்திரி பிரம்மோற்சவத்துக்குக் கொடியேற்றமும், கொடி இறக்க நிகழ்ச்சிகளும் தேர்த் திருவிழாவும் நடைபெறாது.

இவற்றுக்குப் பதிலாக தங்கத் தேரோட்டம் மட்டுமே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது  புரட்டா சி மாதம் என்பதால் பக்தர்கள் லட்சக்கணக்கில் திருமலையில் குவிந்துக்குள்ளனர்.

இந்நிலை தொடர்ந்து  நீடித்தால், வரும் 3 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் கூட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்த வரும் 6, 7, 8, 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் திருப்பதியில் விநியோகம் செய்யப்படும் சர்வ தரிசன டோக்கன்களை நிறுத்தி வைக்கத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.