டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலையொட்டி டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்  தலைமை அலுவலகத்தில் இடைக்கலதலைவர் சோனியாகாந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்பட மூத்த  தலைவர்கள்  தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல்  22 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று  வருகிறது. தலைவர் பதவியை பிடிக் கட்சியின் மூத்த தலைவர்களான கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி உள்ளது.

இந்த நிலையில், இன்று காலை 10மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், வாக்களிக்க தகுதி உள்ள தலைவர்கள், மாநிலங்களின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட மூத்த தலைவர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்.