சென்னை: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர், திசையன்விளை பகுதியைச் சேர்ந்த கே.பி.கே ஜெயக்குமார் தனசிங் கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து  காவல்துறை சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வபெருந்ததை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

: காணாமல் போன காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்  உடல் இரண்டு நாட்களுக்கு பிறகு, பாதி எரிந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக,  காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல்  காங்கிரஸ் எம்எல்ஏ ரூமி மனோர்கர் ஆட்கள் மிரட்டுவதாகவும் , இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும்  கடந்த மாதம் (ஏப்ரல்)  30ம் தேதி நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கு எழுதிய கடிதமும் வெளியாகியுள்ளது.

ஜெயக்குமார் காணாமல் போனது தொடர்பாக அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில்,  ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கரைச்சுத்து புதூரில் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இந்த சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, இதுதொடர்பாக, நெல்லை மாவட்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினேன். ராகுல்காந்தி நெல்லை வந்தபோது தேர்தல் பணிகளில் ஜெயக்குமார் தீவிரமாக இருந்தார். காவல்துறை சுதந்திரமாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியதுடன், இதுதொடர்பாக  கட்சி ரீதியாகவும்விசாரணை நடத்துவோம் என்று தெரிவித்தார். மேலும் தாம் நெல்லைக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.