டில்லி

காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்கக் கோரி நோட்டிஸ் அளித்துள்ளது.

நேற்றைய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அவர்கள் பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்த அந்த நபர்கள், கண்ணீர்ப் புகைக் குண்டு வீசும் குப்பிகள் போன்ற பொருளை வீசி அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியாகி மக்களவை முழுவதும் பரவியது .

அந்த இருவரும் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.

அதே வேளையில் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே மஞ்சள் மற்றும் சிவப்பு நிற புகையை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் கைது செய்யப்பட்ட நபர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்புக் குறைபாட்டால் இருவர் நுழைந்தது தொடர் பாக அவையில் விவாதிக்கக்கோரி காங்கிரஸ் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது  விதி 267-ன் கீழ் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்கக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.