கும்பகோணம்

மிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் கே எஸ் அழகிரியே தொடர்வார் என கட்சி மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அறிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பதவியேற்ற  உடன் சந்தித்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியைத் தவிர்த்து எஞ்சிய 38 தொகுதிகளையும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது.  பிறகு 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் போதும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரி மாற்றப்படுவார் என்று வதந்திகள் பரவின.

ஆயினும் சட்டமன்ற தேர்தலையும் கே.எஸ்.அழகிரி தலைமையிலேயே தமிழக் காங்கிரஸ் கட்சி சந்தித்துத் தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலைக் காரணம் காட்டி, அதற்கு முன்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரி மாற்றப்படுவார் என்ற ஊகங்கள் எழும்பின.

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கும்பகோணத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மண்டல மாநாட்டில் கலந்து கொண்டார்,

அப்போது தினேஷ் குண்டுராவ்,

“கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலையும் கே.எஸ்.அழகிரி தலைமையில்தான் சந்திப்போம் என்று உறுதியாக நம்புகிறேன். தேர்தலைச் சந்திக்கவும், மிகப்பெரிய வெற்றியை ஈட்டவும் கே.எஸ்.அழகிரியுடன் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து உழைக்க வேண்டும்”

என்று தெரிவித்து உள்ளார்.

இந்த கருத்து மூலம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கே.எஸ்.அழகிரி மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இல்லை என்பதும்,  தற்போதைக்கு தமிழக காங்கிரஸ் தலைவராக முடியாது என்பதும்  கே எஸ் அழகிரியே தொடர்வார் என்பதும் தெளிவாகி உள்ளது.