சென்னை

மிழக ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் திருவள்ளுவர் படம் காவி உடையில் இடம் பெற்றுள்ளதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாளை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற உள்ளது. ஆளுந்ர் மாளிகை இந்த விழாவை முன்னிட்டு அழைப்பிதழ் வெளியிட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது., கடந்த ஜனவரி மாதம் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து ஆளுர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்திருந்தற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தற்போது ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் மீண்டும் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது சமூக வலைதளத்தில்

“அரசு அங்கீகரித்த புகைப்படத்தை மாற்றி, சாதி, மத, சமயம் சார்ந்து திருவள்ளுவர் புகைப்படத்தை வெளியிடுவது சட்டத்திற்குப் புறம்பானது; சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் கவர்னரே இப்படிச் செய்வது கண்டனத்திற்குரியது.”

என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.