புதுடெல்லி:
ருமித்த கருத்து கொண்ட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய ஒற்றுமை பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு திமுக உள்ளிட்ட ஒருமித்த கருத்து கொண்ட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடித்ததில், ஸ்ரீநகரில் 30-ஆம் தேதி நடக்கும் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்; வெறுப்பு, வன்முறைக்கு எதிராக இடைவிடாமல் போராடி உயிர்நீத்த காந்தி நினைவு நாளில் நடக்கும் நிகழ்ச்சியில் காந்தியின் நினைவுகளுக்கு அர்ப்பணிக்கிறோம் என்று குறிபிட்டுள்ளார்.