கோயம்புத்தூர் :

ப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சார பில்கள் செலுத்துவது தொடர்பான குழப்பத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோயம்புத்தூர் நுகர்வோர் குரல் மன்றம் விடுத்திருந்த கோரிக்கைக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக, அனைத்து குடியிருப்பு மற்றும் வணிக மையங்களுக்கும், மே 21 வரை மின் கட்டண பில் செலுத்துதலுக்கான நேரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் நீட்டித்தது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான அளவீடுகள் மின் வாரிய தொழிலாளர்களால் எடுக்கப்படாததால், நுகர்வோர் முந்தைய கட்டணச் சுழற்சியில் பதிவான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.

இதனால், பெரும்பாலான வணிக நிறுவனங்கள் குழப்பமடைந்துள்ளனர். ஏனெனில் ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததிலிருந்து பெரும்பாலான வணிகங்கள் மற்றும் கடைகள் மூடியே உள்ளன. இதனால் அந்த கடைகளில் மின் பயன்பாடும் வெகுவாக குறைந்திருக்கும். இந்நிலையில், அதற்கு முந்தைய மாத்தில் பதிவான அதே கட்டணத்தை கடைகள் மூடி இருந்த மாதங்களுக்கும் செலுத்துவது எப்படி ஸ்ரீயாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதேபோல், வாடகை வீடுகளில் வசிக்கும் பலர் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். மேலும் அவர்களின் மின்சார நுகர்வு மிகக் குறைவாகவே உள்ளது.

கடந்த ஒரு மாதமாக மூடப்பட்ட அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முந்தைய பில்லிங் சுழற்சியில் அவர்கள் செலுத்திய அதே தொகையை செலுத்த வேண்டும் என்று மின் வாரியம் அறிவித்திருந்தாலும், நுகர்வோர் மின் பயன்பாட்டை அளவீடு செய்து கட்டணம் செலுத்தலாம் என்று மின்வாரியம் சமீபத்தில் பரிந்துரைத்தது. இருப்பினும் கோவையில், இந்த முறை செயல்படுத்தப்படவில்லை. முந்தைய கட்டணத் தொகையை நுகர்வோர் செலுத்துமாறு அதிகாரிகள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நுகர்வோர் குரல் மன்றம், செயலாளர் லோகு, தான் பயன்படுத்தி மின்சாரத்திற்கான அளவுகளை எடுத்து அனுப்ப வேண்டும் என்றும் மின்வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தார். இதன் மூலம் நுகர்வோருக்கான செலவைக் கணக்கிட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சரிய அளவீடு இல்லாமல் மின் கட்டண பில் செலுத்துதலில் உள்ள குழப்பம் வீட்டு உரிமையாளர்களுக்கும் குத்தகைதாரர்களுக்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து மின்வாரியம் பில்கள் செலுத்துவது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக, மின்சாரம் வாரியம் அளித்துள்ள விளக்கத்தில்,

a) முந்தைய மாத பில்லிங் (பிஎம்சி) இன் கீழ் கட்டணம் வசூலிக்கப்பட்ட எல்.டி தொழில்துறை மற்றும் வணிக நுகர்வோர் பி.எம்.சி அடிப்படையில் மே 22 வரை அல்லது சுய மதிப்பீட்டு கணக்கை வழங்குவதன் மூலம் உண்மையான நுகர்வுக்கான திருத்தப்பட்ட மசோதா மூலம் பணம் செலுத்தலாம்.

b) எல்.டி வீட்டுகளில் பயன்ப்டுத்தும் நுகர்வோர் கொரோனா காரணமாக பி.எம்.சியின் கீழ் பில்லிங் செய்யப்படுமிடத்தில், மின் கட்டணம் அளவீடு அடுத்த தேதியில் மட்டுமே எடுக்கப்படும். எனவே இரண்டு மாதாந்திர கணக்கீடுகளுகான பில்லிங் செய்யப்பட வேண்டும். அந்தந்த சிசி பில்களின் அடுத்த மதிப்பீட்டின் போது கணக்கீட்டை உறுதிசெய்த பிறகு பிஎம்சிக்கு செலுத்தப்படும் கட்டணம் சரி செய்யப்படும்.

c) மார்ச் 25 முதல் மே 17 வரை வரவிருக்கும் அனைத்து எல்.டி மற்றும் எல்.டி.சி.டி நுகர்வோருக்கு பணம் செலுத்துவதற்கான நேரத்தை நீட்டித்தல், பி.பி.எஸ்.சி மற்றும் டி.சி-ஆர்.சி கட்டணங்களை விதிக்காமல் மே 22 வரை வழங்கப்படும்.