துரை

ன்று மதுரை காந்தி நினைவு அருங்காடசியகத்தில் ஒடிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஒடிசா மாநிலம் பாலசோர்  அருகே நடந்த ரயில் விபத்தில் சுமார் 530 பேர் உயிர் இழந்துள்ளனர்..   நூற்றுக்கணககானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.   மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.  உயிர் இழந்தோருக்கும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று மாலை மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு மவுன அஞ்சலி கூட்ட நடந்தது.   இந்த இரங்கல் கூட்டம் ஐஸ்வர்யம் அறக்கட்டளை அறங்காவலர் டாக்டர் பாலகுருசாமி, பொருளாளர் டாக்டர் அமுதநிலவன் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் காந்தி நினைவு அருங்காட்சியக கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி நிலைய அலுவலர் தேவதாஸ் மற்றும் பணியாளர்கள், சமூக சேவகர் அமுதன், பள்ளி, மாணவ, மாணவிகள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.