டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு டில்லி உயர்நீதி மன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-ல் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய மார்ச் 24ந்தேதி வரை டில்லி உயர்நீதி மன்றம் தடை விதித்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையை தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்துக்கு நிபந்தனை  ஜாமின் வழங்கி டில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.10 லட்சம் பிணைத்தொகை மற்றும் பாஸ்போர்ட் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.