சென்னை:

தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் கூற சென்ற நடிகர் ரஜினிகாந்த், அங்க கலவரத்துக்கு காரணம் சமூக விரோதிகள் என்று கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் ரஜினியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  ஸ்டெர்லைட்டுக்கு நடைபெற்ற மக்கள்  போராட்டத்தில் புகுந்த சமூக விரோதிகள் யார்? என்று ரஜினியிடம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேவராஜ் என்பவர் ரஜினிமீது கொடுத்துள்ள புகார் மனுவில்,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி இருப்பதாக ரஜினி கூறி உள்ளார். இதுபற்றி அவரிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவர் கூறியது உண்மை இல்லை என்பது தெரியவந்தார்,  பொய் பிரசாரம் செய்ததாக ரஜினி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும்  காலா படத்துக்கு என்ன விலையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதையும் காவல் துறை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.