சென்னை:
சென்னை ரிசர்வ்வங்கி சுரங்கப்பாதை பெருந்தலைவர் காமராஜர் பெயர் தாங்கிய கல்வெட்டு புதுப்பிக்கும் பணியை நேற்று மாவட்ட தலைவர்கள் எம்.எஸ் திரவியம், சிவ.ராஜசேகரன் உறுதியளித்தபடி சென்னை மாநகராட்சி செய்தது.


இந்த பணியை சென்னை கிழக்கு மாவட்ட துணை தலைவர் துறைமுகம் குமார் பார்வையிட்டார். மேலும் பேசிய அவர்,  மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது என்றும் தெரிவித்தார்.