டில்லி

வரும் 1 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த முறை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.  முழு பட்ஜெட். தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு முழு தாக்கல் செய்ய உள்ளது. தற்போது மத்தியில் மோடியின் தலைமையில் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி/ரது.

மோடி அரசு தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்ய உள்ள கடைசி பட்ஜெட் இது என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இடம் பெறும் குடியரசுத் தலைவர் உரையில் அரசின் சாதனைகள், திட்டங்கள் உள்ளிட்டவை இடம் பெறும் என்று தெரிகிறது.

வரும் 31 ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்புள்ளதாகக தகவல் வெளியாகியுள்ளது. இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்.