கொலை நடைபெற்ற கல்லூரி வாசல் – கொலை செய்யப்பட்ட மாணவி அஸ்வினி

சென்னை: 

சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி  கல்லூரி வாசலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.

கே.கே.நகரில் உள்ள மீனாட்சி  கல்லூரி வாசலில் மாணவி அஸ்வினி என்ற பிகாம் படித்து வந்த மாணவி இளைஞர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டார். அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை அந்தப்பகுதி பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து உதைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விசாரணையில் மாணவியை கொலை செய்த இளைஞரின் பெயர் அழகேசன், மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர்  என்பது தெரிய வந்துள்ளது.

இறந்த மாணவி அஸ்வினியின் தோழிகளிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். ஏற்கெனவே, அழகேசன்மீது அஸ்வினி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கில் மதுரவாயல் காவல்துறையினர் அழகேசன்மீது ஏற்கெனவே கைது நடவடிக்கை எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருதலைக் காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.