சிவகார்த்திகேயனை வைத்து விக்னேஷ் சிவன் படம் இயக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. கதை பிரச்சனையால் விக்கி, சிவகார்த்திகேயன் இடையே சரியான பேச்சுவார்த்தை இல்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், இயக்குநர் நெல்சன் திலீப் குமார் மற்றும் டான்ஸர் சதீஷ் ஆகியோர் சேர்ந்து ஆம்ஸ்டர்டாமுக்கு பயணம் செய்துள்ளனர்.

அங்கு சென்றுள்ள புகைப்படங்களை அனைவரும் இன்ஸ்ட்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் .

ஆனால் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் இல்லை. விக்கியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் சிவகார்த்திகேயனின் பெயரும் இல்லை . இது அனைவரையும் கேள்வி குறி ஆக்கியுள்ளது.