கோவை:
கொரோனா வைரஸ் அதிகம் பரவும் மாவட்டங்களில் ஒன்றான கோவையில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோவை ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா வைரஸ் அதிகம் பரவும் மாவட்டங்களில் ஒன்றான கோவையில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி,

  • கோவையில் உள்ள மருந்து கடைகள், பால் கடைகள் காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.
  • கோவையில் உள்ள முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • அத்தியாவசியமான கடைகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
  • கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி,
  • 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்
  • மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை அனுமதி
  • அதேபோல் கோவையில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளிலும் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி
  • சில்லரை விற்பனைக்கு அனுமதி இல்லை
  • 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க வேண்டும்
  • கேரள மாநில எல்லையில் இருந்து கோவை வருபவர்கள் அனைவரும் சோதனை செய்யப்படுவார்கள்
  • கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு தவணைகள் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே கோவை நகருக்குள் அனுமதிக்கப்படுவார்கள்

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.