சென்னை

கூட்டுறவுத் துறை ரேஷன் கடை ஊழியர்கள் கனிவோடும் மரியாதையுடனும் நடக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது,

இன்று தமிழக அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் ரேஷன் கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சண்டையிடக்கூடாது என்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் ரேஷன் கடைக்கு உள்ளேயும் வெளியேயும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் ரேஷ ன் கடை ஊழியர்கள், குடும்ப அட்டைதாரர்களிடம் கனிவோடு, மரியாதையாக, கண்ணியமாக நடந்து கொள்ள வேண் டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு தரம் குறைந்த அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யக் கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.