சென்னை

முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் நூலைப் படித்து விட்டுப் பாராட்டிய ரஜினிகாந்த்துக்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய அவரது சுயசரிதையை உங்களில் ஒருவன் என்னும் பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார்.   சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் இந்த நூல் வெளியிடப்பட்டது.   இந்த நூலைப் படித்த பலரும் முதல்வருக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் தமிழகத்தின் பிறபல் திரை நட்சத்திரமான ரஜினிகாந்த் இந்த நூலைப் படித்து விட்டு முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தொலைப்பேசி மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின், “உங்களில் ஒருவன் படித்துவிட்டு தொலைப்பேசியில் பாராட்ட்டிய நண்பர் ரஜினிகாந்துக்கு நன்றி.  உங்களது வாழ்த்து மகிழ்ச்சியை மட்டுமின்றி மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.