சென்னை

த்திய அரசால் தமிழகத்துக்கு நிதியும் கிடைப்பதில்லை நீதியும் கிடைப்பதில்லை எனத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு மிக்ஜாம் புயல், வெள்ளப் பாதிப்புகளுக்குத் தேசிய பேரிட நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   மத்திய அரசு  மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ. 285 கோடி, கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக ரூ.397 கோடி வழங்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில், 

”தமிழகம் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாக 37,907 கோடி ரூபாய். கோரியது. புயலால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழக அரசு மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து இதுவரை  2,477 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. 

தற்போது மத்திய பா.ஜ.க அரசு அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இது கூட நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்! ” 

என்று பதிவிட்டுள்ளார்.