சென்னை: குருநானக் கல்லூரி பொன்விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து,  நாவலூரில் உள்ள காக்னிசன்ட் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். அதையடுத்து, சோழிங்கநல்லூர் இ- சேவை மையத்தில் ஆய்வு நடத்தினார்.

சென்னை அடுத்த நாவலூரில் 6 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள காக்னிசன்ட் நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. காக்னிசன்ட் நிறுவனத்தின் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். முன்னதாக   சோழிங்கநல்லூர் இ- சேவை மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். பொதுமக்கள் தொலைபேசி மூலம் தெரிவிக்கும் குறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கேட்டறிந்தார்.