சென்னை: வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.