சென்னை; தமிழ்நாட்டில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் ஒரு பகுதியாக நடத்தப்படும் அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் (பிராக்டிக்கல் தேர்வு), மார்ச் 7ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு தலா 8 லட்சம் மாணவ, மாணவிகள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ளனர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 14 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக பொதுத் தேர்வின் ஒரு பகுதியான செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்காக தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தேர்வுத் துறை வெளியிட்டுள்ள பொதுத்தேர்வுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இந்த மாதம் 31ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. மேலும்,  செய்முறைத் தேர்வுகள், மார்ச் 7 ஆம் தேதி முதல் 10 தேதி வரை  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.