திருவண்ணாமலை:

ரும் 18ந்தேதி வெள்ளிக்கிழமை சித்ரா பவுர்ணமி வருவதையொட்டி, திருவண்ணாமலையில் 1,600 போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மாவட்ட டிஐஜி வனிதா கூறி உள்ளார்.

தமிழகத்தில் நாளை மறுதினம் (18ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறும் உள்ள நிலையில், அன்றைய தினம் சித்ரா பவுர்ணமியும் வருகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் ஏராளமான கோவில்களில் சிறப்பு பூஜைகள் உள்பட பல்வேறு விசேஷங்கள் நடைபெற உள்ளது.

சித்ரா பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலை கிரிவலத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம்.  ஒரே நாளில் சித்ரா பவுர்ணமியும், தேர்தலும் வருவதால், பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் தனித்தனியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சித்ரா பவுர்ணமிக்கு  2 சிறப்பு எஸ்.பி.க்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். மேலும், கோவில், கிரிவலம், போக்குவரத்து என்று 3 ஆக பிரித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவிலில் மட்டும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சித்ரா பவுர்ணமிக்கு மட்டும் தனியாக 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று டி.ஐ.ஜி வனிதா தெரிவித்தார்.

அதுபோல  சித்ரா பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலைக்கு 2895 சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன. 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதை வரை செல்ல 61 சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது. மேலும் காவல் உதவி மையங்கள் அமைத்து பக்தர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 108 ஆம்புலன்சு நிறுத்தி வைக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.