சென்னை

சென்னையில் உள்ள அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் 30க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பணியில் அமர்த்தப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

சென்னையில் உள்ள அம்பத்தூரில் இயங்கிவரும் ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பாக 30-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில்,சிறுவர்கள் ஐஸ்கிரீம் பேக்கிங் பிரிவில் பணியாற்றியது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த 2 மாதங்களாக பணியாற்றிய குழந்தை தொழிலாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் உரிய ஊதியம் வழங்கவில்லை எனக்கூறி, பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ஆவின் நுழைவு வாயில் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்,

“ஆவினில் குழந்தைத் தொழிலாளர் பணியாற்ற வாய்ப்பு இல்லை. அவ்வாறு குழந்தை தொழிலாளர் பணியாற்றியது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”

என்று உறுதியளித்துள்ளார்.