சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் வரும் 4ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா முடக்கத்தில் இருந்து படிப்படியாக விலக்கும் பொருட்டு, மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து அனுமதி, தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை ரத்து என தளர்வுகளை அறிவித்தது.

இந் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் வரும் 4ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

இது தவிர, மாவட்டங்களில் கொரோனா சூழல், பாதிப்பு விவரங்கள், சிகிச்சை முறைகள் பற்றியும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. வரும் 4ம் தேதி மாலை 4 மணிக்கு இந்த ஆலோசனை காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது.