சென்னை:
போதைப்பொருள் ஒழிப்பு, ஆன்லைன் ரம்மி தொடர்பாக முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் ஒருவாரம் போதைப் பொருள் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. கடந்த 11-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், போதைப்பொருள் ஒழிப்பு, ஆன்லைன் ரம்மி தொடர்பாக உள்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.