சென்னை:
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், உக்ரைனில் இருந்த தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தாயகம் திரும்பிய கடைசி அணி மாணவர்களை இன்று வரவேற்றேன். அவர்கள் நம் நாட்டிலேயே தங்கள் கல்வியைத் தொடர உதவவேண்டுமென ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்; உரிய ஒத்துழைப்பைத் தமிழ்நாடு அரசு வழங்கும்!

நெருக்கடி மிகுந்த சூழலுக்கிடையே நம் மாணவர்கள் அனைவரையும் விரைவாக மீட்க உதவிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரவுபகல் பாராமல் உழைத்த தமிழ்நாடு அரசின் குழுவைச் சேர்ந்த சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். என்று குறிப்பிட்டுள்ளார்.