சென்னை: கள ஆய்வுக்காக இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த பயணத்தின்போது, மருது சகோதரர்கள், வீறு கவியரசர் முடியரசனுக்கு உருவ சிலைகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ஏராளமான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இரு நாள் பயணமாக இன்று சிவகங்கை மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்ள செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், எமாவட்டத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்களுக்கு முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். அப்போது அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைகிறதா என முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்.. மேலும் அரசு சார்பில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளும் முதல்வர் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்குகிறார் இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அத்துடன், சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு சிலைகளுக்கள் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்.
நாளை காலை அங்குள்ள துரைசிங்கம் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்ற அரசு விழாவில் காரைக்குடியில் அமைக்கப்படும் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்கறிப்பில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிவகங்கைச் சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் சிலை அமைத்துப் பெருமை சேர்த்திட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அந்தக் கோரிக்கைகளை ஏற்று,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாமன்னர்களான மருது சகோதரர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவிடம் அருகில் ரூ.1 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கும் புதிய திருவுருவச் சிலைகளுக்காக நாளை (புதன்கிழமை) துரைசிங்கம் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்ற அரசு விழாவில் அடிக்கல் நாட்டுகிறார்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் வணங்காமுடியரசர் வளையா முடியரசர் என போற்றப்பட்ட வீறு கவியரசர் முடியரசனுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில், காரைக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் திருவுருவச் சிலைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
மாமன்னர் மருது பாண்டியர்களின் உற்ற நண்பராக விளங்கிய சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் நினைவைப் போற்றி அவருக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், சிவகங்கை மாவட்டத்தில் அன்னாரின் வாரிசுகள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய நகரம்பட்டியில் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள உருவச் சிலையினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் நகரம்பட்டியில் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள உருவச் சிலையினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
அதோடு சிவகங்கை மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் கட்சி ஆலோசனைக் கூட்டத்திலும் முதல்வர் கலந்துகொள்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.