சென்னை: தமிழ்நாட்டில்கள் கல்லூரிகள் திறப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார்  என்று கூறிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  ஆகஸ்டு -1 முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி பாதிப்பு 2500 முதல் 3ஆயிரத்துக்குள்ளேயே இருந்து வருகிறது. இதனால், கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து ஏராளமான தளர்வுகள் வழங்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதைத்தொடர்ந்து, பள்ளிக் கல்லூரிகளை திறக்க கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில்,  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் திட்டமிட்டபடி ஆகஸ்ட்-1ம் தேதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் கூறியவர்,  கல்லூரி திறப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, முதல்வர் ஸ்டாலின்  முடிவு செய்வார் என்று கூறினார்.