சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்ற பிறகு, மு.க.ஸ்டாலின் முதன்முறையாக இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.  இன்று மாலை பிரதமரை சந்திக்கிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரான பின் முதன்முறையாக டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் பிரதமர் மட்டுமின்றி மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பியூஸ் கோயல், ஹர்ஷவர்தன் உள்பட பலரை சந்திக்க உள்ளதாகவும், தொடர்ந்து நாளை  சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்திக்க இருப்பதாக தெரிகிறதுஅவர், பிரதமர் மோடியுடன் பேசுவார் என

முதல்வர் ஸ்டாலினுடன் திமுகவைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் சிலரும் டெல்லி செல்கின்றனர். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் செய்துள்ளார்.