சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நாளை சென்னை வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்கிறார்.  நாளை சென்னை வருவதை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் நாளை மாலை சென்னை வருகை புரிய உள்ளார். குடியரசு தலைவரை விமான நிலையத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் வருவதை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. சென்னைக்கு நாளை வரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ராஜ்பவனில் தங்குகிறார். ஆக.6-ம் தேதி அண்ணா பல்கலை.யில் நடைபெறும் சென்னை பல்கலை 165-வது பட்டமளிப்பு விழாவிலும்  விழாவில் பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து, ஆக.6-ஆம் தேதி ஆளுநர் அளிக்கும் விருந்தில் தமிழக முதல்வர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

பின்னர், குடியரசுத் தலைவர் திரவுபதி  நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கும் செல்கிறார். குடியரசு  தலைவர் வருகையையொட்டி மசினகுடி ஹெலிபேடு, தெப்பக்காடு யானைகள் முகாம்களில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மி அவற்றை பராமரித்துவரும் பழங்குடி தம்பதி பொம்மன் – பெள்ளி தம்பதியையும் குடியரசு தலைவர் சந்திக்க உள்ளார்.

இந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக நாளை வரை அனைத்து விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளை தங்க அனுமதிக்கக்கூடாது என விடுதி உரிமையாளர்களுக்கு போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதே போல் நாளை வரை சுற்றுலா பயணிகள் நீலகிரி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.