சென்னை: உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் கடைசிகட்ட மாணவர்களை  சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் வரவேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆளாகி உள்ள உக்ரைனில், மருத்துவம் படித்து வந்த  தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இறுதியாக சுமி நகரில் சிக்கிய மாணவர்களை மீட்டு இந்திய விமானம் நேற்று மாலை டெல்லி வந்தடைந்தது. அவர்களை திமுக எம்.பி. சிவா தலைமையிலான தமிழக மீட்பு குழுவினர் வரவேற்றனர்.

இதையடுத்து தமிழக மாணவர்கள் 53 பேர் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் செனினை வருகின்றனர். உக்ரைனில் இருந்து திரும்பும் தமிழக மாணவர்களின் கடைசி குழுவை வரவேற்க, முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையம் செல்லவுள்ளார்.

உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்கள் முழுமையாக மீட்கப்பட்டதாக திருச்சி சிவா தவல்…