சென்னை: மத்திய  அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல; தமிழர்களின் தனிக்குணத்தை பார்க்க வேண்டிவரும்!” என மத்திய பாஜக அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரடி எச்சரிக்கை  விடுத்துள்ர்.  தமிழ்நாட்டிற்கு நிதி வழங்காமல் இருப்பதை நியாயப்படுத்திய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்தியஅரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால், தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய  நிதியை மத்தியஅரசு தர மறுத்து வருகிறது.  தமிழ்நாடு,  இந்திய அளவில் கல்வி வழங்குவதிலும், கல்வி மேலாண்மையிலும் முன்னிலை மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் மாணவர்கள் உலக அளவில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால்,  மத்திய அரசின்   மும்மொழி திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்து வருவதால், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நிதிகளை மத்தியஅரசு குறைத்து வருகிறது.

இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் அளித்த பேட்டி சரச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X வலைதளப் பக்கத்தில், “They have to come to the terms of the Indian Constitution என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை ‘rule of law’ என்கிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?

மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!

“மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று மிரட்டல் விடும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!

எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டிஎ யிருக்கும்”

என பதிவிட்டுள்ளார்.